ஜகார்த்தாவில் தாகூரின் 150 வது பிறந்த நாள் கொண்டாட்டம்
இந்த நிகழ்ச்சிகள் வரும் மே 14ம் தேதி சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு குனிங்கன் உஸ்மர் இஸ்மாயில் ஹாலில் நடைபெற உள்ளது. கீழ்கண்ட நிகழ்ச்சிகள் இந்நிகழ்வில் இடம்பெறும் என்று தூதரகத்தின் செயதி குறிப்பு தெரிவிக்கிறது.
1. இந்தோனேசியாவுக்கும் ஒரிசா மாநிலத்திற்குமான தொடர்புகள் குறித்த திரு விவேக் பாமியி புகைப்பட கண்காட்சி. 2. தாகூரின் பாடல்களை கொண்ட சித்தார் இசையுடன் கூடிய வாய்ப்பாட்டு 3. தாகூரின் நாவல்களின் இந்தோனேசிய மொழிபெயர்ப்பான “தாகூர் தான் கானா” என்ற நூல் வெளியீடு. 4. பாலி மற்றும் கதக் நாட்டியக்குழுவினர் இணைந்து வழங்கும் தாகூர் அவர்கள் 1927 ஆம் ஆண்டு பாலிக்கு வருகை தந்த போது எழுதிய ”சகரிகா” என்னும் கவிதையை அடிப்படையாக கொண்ட ”புத்ரி செகரா” என்னும் நாட்டிய நாடகம்.